சொந்த மாவட்டத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர்; வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
சொந்த மாவட்டத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர்; வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்


சேலம்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

சேலத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கடை, கடையாக சென்று வழங்கிய முதல்வர், திறந்த வேனில் சென்று சுதீஷுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குக் கேட்டார். அப்போது அவர் பேசுகையில், நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும், நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றார்.

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு சேலம் கருமந்துறை விநாயகர் கோயிலில் முதல்வர் பழனிசாமி வழிபாடு நடத்தினார்.

சேலத்தில் பிரசாரம் நடத்திவிட்டு, இன்று தருமபுரியிலும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்தும் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com