ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவுக்கு தமிழக அரசு  ரூ.10 கோடி நிவாரண நிதி 

ஃபானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவுக்கு தமிழக அரசு  ரூ.10 கோடி நிவாரண நிதி 
Updated on
1 min read

சென்னை: ஃபானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

ஃபானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது

ஒடிஷா மக்களுடனான ஒற்றுமையையும்  ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com