சிறந்த நூல், பதிப்பகத்துக்குப் பரிசு: திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் அறிவிப்பு

 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் சமயம், இலக்கியம், மொழி, பண்பாடு, தேசிய ஒருமைப்பாடு குறித்து 2018-2019-இல் வெளிவந்த சிறந்த நூல், பதிப்பகத்துக்குப் பரிசு வழங்கப்படவுள்ளது.


 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் சமயம், இலக்கியம், மொழி, பண்பாடு, தேசிய ஒருமைப்பாடு குறித்து 2018-2019-இல் வெளிவந்த சிறந்த நூல், பதிப்பகத்துக்குப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு: சமயம், இலக்கியம், மொழி, பண்பாடு, தேசிய ஒருமைப்பாடு குறித்து 2018-2019 வரையிலான காலத்தில் வெளிவந்த நூல்களில், சிறந்த நூல் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரமும், அந்த நூலை பிரசுரம் செய்த பதிப்பகத்துக்கு ரூ.10 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 
இந்தப் பரிசு திருக்கோவலூரில் வரும் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ள 44-ஆவது ஆண்டு கபிலர் விழாவில் வழங்கப்படும்.  தேர்வு செய்யப்படாத நூல்களை திருப்பி அனுப்ப இயலாது. 
நூல் தேர்வில் பங்கேற்க விரும்பும் பதிப்பகத்தார், நூல் ஆசிரியர்கள், தேர்வுக் குழுவுக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் 3 படிகள் அனுப்பி வைக்க வேண்டும். 
அனுப்ப வேண்டிய முகவரி: சிவாலயம் ஜெ.மோகன்,  புதிய எண் 14/7,  பழைய எண் 25ஏ, ஜி.எஸ்.பிளாட்ஸ், 3-ஆவது தளம், 2-ஆவது தெரு,  அபிராமபுரம், மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு 044-24987945 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com