அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
Updated on
1 min read


அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் 33 மையங்களில் நடத்தப்படும். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com