Enable Javscript for better performance
லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 15th May 2019 12:31 PM  |   Last Updated : 15th May 2019 12:31 PM  |  அ+அ அ-  |  

    HighCourtch

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். நிறுவன ஊழியர்களிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மார்ட்டினுக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரியின் காசாளரும், மார்ட்டினின் உதவியாளருமான பழனிசாமியிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்குப் பின்னர் பழனிசாமி, கோவை காரமடை பகுதியில் உள்ள குட்டையில் இறந்து  கிடந்தார். 

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொலை செய்து அவரது உடலை காரமடை குட்டையில் வீசியுள்ளனர். எனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக புகார் மனு எழுதி அந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என காரமடை போலீஸார் நிர்பந்தம் செய்தனர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள எனது தந்தையின் உடலில் அவரது முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக் காயங்கள் உள்ளன. எனவே, எனது தந்தையின் உடலை மருத்துவர்கள் குழுவைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். 

    அந்த மருத்துவர் குழுவில் எங்களது தரப்பு மருத்துவர் ஒருவரை இடம்பெற அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp