
கரூர்: அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதிமய்ய வேட்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு பறக்கும்படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கரூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர், கரூர் வையாபுரி நகரில் வங்கிச் சேவை மையம் நடத்தி வருகிறார்.
இவரது அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக கரூர் பறக்கும்படை அலுவலரும், கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான மனோகரனுக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேட்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள் அங்குச் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.