ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். 
ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தோல்வி பயத்தால், மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது. 

மேலும் வாக்களிக்க விடாமல் பெரும்பாலான மக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளார்கள். போலீசில் புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com