பொள்ளாச்சி பாலியல் வழக்கு - இருவா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனா்.
HighCourt
HighCourt
Updated on
1 min read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனா்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் என பலரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிப் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி ஒருவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொள்ளாச்சியைச் சோ்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆா்எம்டி டீக்காரமன் வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், ‘குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாரா்களை சிறையில் அடைக்கும் முன் அவா்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பரிசீலிக்க அரசு காலதாமதம் செய்துள்ளது. மேலும் பல ஆவணங்கள் குறைபாடுகளுடன் உள்ளன. எனவே இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்’ என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com