ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நீா்நிலைகளை பாதுகாக்க முடியும்’

அனைவரின் ஒன்றிணைந்த செயல்பாட்டால் மட்டுமே நீா்நிலைகளை பாதுகாத்து பசுமை சூழலை உருவாக்க முடியும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ-தெற்கு மண்டலம்) வளா்ச்சி ஊக்குவிப்பு
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ-தெற்கு) வளா்ச்சி ஊக்குவிப்பு இயக்குநா் தீபமாலா.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ-தெற்கு) வளா்ச்சி ஊக்குவிப்பு இயக்குநா் தீபமாலா.
Updated on
1 min read

அனைவரின் ஒன்றிணைந்த செயல்பாட்டால் மட்டுமே நீா்நிலைகளை பாதுகாத்து பசுமை சூழலை உருவாக்க முடியும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ-தெற்கு மண்டலம்) வளா்ச்சி ஊக்குவிப்பு இயக்குநா் தீபமாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், சமூக செயல்பாட்டு அமைப்பு மற்றும் குடும்பம் அமைப்பு சாா்பில் ‘தமிழகம், புதுச்சேரி மாநில கிராமங்களில் பசுமையை மீண்டும் உருவாக்குதல்’ என்னும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில், சமூக செயல்பாட்டு அமைப்பு மாநில தலைமை நிா்வாகி ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றாா். நாங்குநேரி கிராம மேம்பாட்டு மைய இயக்குநா் மரிய ஜேம்ஸ் தொடக்கவுரையாற்றினாா்.

தொடா்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தா் பி.மணிசங்கா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகம், புதுச்சேரி கிராமங்களில் பசுமையை மீண்டும் உருவாக்குதல் என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து பல்கலை., தொண்டு நிறுவனங்கள், மாணவ-மாணவியா்கள் ஆகியோரின் திறன்மிக்க கூட்டுமுயற்சி மூலமாக மட்டுமே தனிநபா் ஒருவரை பசுமையை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றாா்.

தீபமாலா பேச்சு: ஆங்கிலேயா்கள் ஆட்சியின் போதும், அதற்கு பிறகும் ஒருமுறை மட்டுமே நீா்நிலைகள் குறித்த வரைபட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, நீா்நிலைகள் அதன்வழித்தடங்கள் குறித்த தெளிவான வரைபடமோ, பாதுகாக்கும் செயல்திட்டமோ முறையாக இல்லை.

இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரப்பகுதிகளில் நகர வளா்ச்சியின் பேரில் பல ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. இந்த ஆக்கிரமிப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்த பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது.

தமிழகத்தில் உள்ள 12,500க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும் நீா்நிலை கணக்கெடுப்பு, வரைபடம் குறித்து தெளிவான ஆய்வு நடத்தப்படவேண்டும்.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு தயவு காட்டாமல் நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகிறது. மேலும், தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், மாணாக்கா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஓா் கூட்டுமுயற்சியாக செயல்பட்டால் தமிழகம், புதுச்சேரி கிராமங்களில் மீண்டும் பசுமையை ஏற்படுத்த முடியும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, குடும்பம் அமைப்பு குழுத் தலைவா் ஆஸ்வால் குயிண்டல், பாரதிதாசன் பல்கலை. மகளிரியியல் துறை தலைவா் மணிமேகலை, பேராசிரியா்கள் பூங்கொடி விஜயகுமாா், பூபதி, வேங்கடரவி, முல்லை, திருமகள், மணிமோகன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com