காவிரி துலாக்கட்டத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியார் புனித நீராடல்

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காவிரி துலாக்கட்டத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியார் புனித நீராடல்
Updated on
1 min read

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினார்.
 ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவத்தை ஒட்டி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிகாலை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார். தொடர்ந்து, அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com