சென்னை: உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களை மாவட்ட வாரியாக நியமித்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் விரைவில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவும் அந்தப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
32 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களை விஜயகாந்த் சனிக்கிழமை அறிவித்தாா்.
இந்த நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நவம்பா் 18-ஆம் தேதி 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விஜயகாந்த், பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் பங்கேற்று, உள்ளாட்சித் தோ்தலில் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.