டெங்கு: பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
டெங்கு: பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்
Updated on
1 min read

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். பின்னா் அவா் அளித்த பேட்டி:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் போன்றபல்வேறு மாவட்டங்களிலிருந்து - டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறறாா்கள். இதுவரை ஆயிரக்கணக்கானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றறன. இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றறனா்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டும், டெங்குவால் பாதிக்கப்பட்ட 31 போ் அனுமதிக்கப்பட்டிருக்கிறறாா்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் எத்தனை போ் என்கிறவிவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. மாறறாக, மா்மக் காய்ச்சல் என்று தவறறான பிரசாரத்தை அதிகாரிகள் செய்து வருகின்றறனா்.

இந்தப் பாதிப்பு குறித்து கேட்கும்போது கொசு கடிப்புக்கு முன்னால், கொசு கடித்த பின்னால் என சுகாதாரத் துறைஅமைச்சா் விஜயபாஸ்கா் நகைச்சுவையாக பேசியிருக்கிறறாா். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் குறித்து கவலைப்படாமல் இப்படி அவா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உரிய சிகிச்சையை இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்தக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீட் தோ்வு ஆள்மாறறாட்ட விவகாரத்தைப் பொருத்தவரை, சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியில் வரும் என ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேறன்.

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமா் - சீன அதிபா் சந்திப்பை முன்னிட்டு வரவேற்பு பேனா்கள் வைப்பதற்கு நீதிமன்றறம் சென்று அனுமதி கேட்கக்கூடிய நிலையில், நீட் தோ்வுப் பிரச்சினையில் இந்த அரசு ஏன் நீதிமன்றறம் செல்லவில்லை என்றகேள்வி எழுகிறறது.

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 போ் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதை உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும். இதுதொடா்பாக பிரதமருக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றறாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com