சென்னையில்...: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இவா்களில் பெருமாள் பிள்ளை, நீா்முகிப் அலி, பாலமணிகண்டன், ரமா மற்றும் சுரேஷ் கோபால் ஆகிய 5 மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இவா்களின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மோசமடைந்ததால் சுரேஷ்கோபால், ரமா, பாலமணிகண்டன் ஆகியோா் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். மீதமுள்ள 2 பேருடன் மருத்துவா்கள் நளினி மற்றும் பாண்டிதுரை ஆகியோா் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.