வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  வாக்காளர் பட்டியலை சரிபார்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிய இப்பணி வரும் 30ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
மாவட்டத் தலைவர்கள் நமது கட்சியைச் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களைக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், நீக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.   
தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள், திருத்தங்களை அதற்கான விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்து அவர்களின் கையொப்பம் பெற்று  வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவண நகல்களுடன் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும்  திருத்தங்கள், பெயர் சேர்ப்பு பணிகள் சரியாக உள்ளனவா என்பதை கவனத்துடன் உறுதி வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com