தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா அண்மையில் பிறப்பித்தார்.
அதன் விவரம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 14-இல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையரகத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது என்று தனது உத்தரவில் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.