திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26-9-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், விருதுநகர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருப்புக்கோட்டை முன்னாள் நகரச் செயலாளரும் தொகுதி செயலாளருமான ஆர்.சிவசங்கரன், Ex. M.C., தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., - மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.பி.கே.பாபு, அருப்புக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் ஏ.கே.மணி, மாவட்ட துணைச் செயலாளர் துரை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.வி.டி.சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ். சிவபிரகாசம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் க.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.