கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இரவு 9.09 மணிக்கு மின் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்: அமைச்சர் தங்கமணி

இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, மின்சாரப் பிரச்னை ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உடனடியாக சரி செய்யப்படும் என்று தமிழக மின்துற

News image

அமைச்சர் தங்கமணி

Updated On :5 ஏப்ரல் 2020, 6:56 am

DIN

இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, மின்சாரப் பிரச்னை ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உடனடியாக சரி செய்யப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியா்களும்  ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கி 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின்விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மின்விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் மற்ற மின் சாதனங்கள் வழக்கம்போல் இயக்கத்தில் இருக்கலாம் என்றும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து இதுகுறித்து, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, 'இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டாலும், மற்ற மின் சாதனங்கள் இயங்கலாம். அவற்றை அணைக்கத் தேவையில்லை. இரவு 9.09 மணிக்கு பிறகு மின்சார பிரச்னை ஏற்படும் என்று யாரும் பயப்பட வேண்டும். மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, மின்சாரப் பிரச்னை எங்கேனும் ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உடனடியாக சரி செய்யப்படும். மின்சார ஊழியர்கள் அனைவரும் தயார்நிலையில் இருக்கின்றனர். இரவு 9 மணிக்கு மருத்துவமனைகளில் விளக்குகள் அணைக்கப்படாது. மின் அணைப்பு நிகழ்வு சவாலானது என்றாலும் சாத்தியமானது. 90% மின் ஊழியர்கள் பணியில் உள்ளனர்' என்று தெரிவித்தார். 

மேலும், 'தமிழகத்தில் வழக்கமான காலத்தில் 16000 மெகா வாட் தேவைப்படும். தற்போது 11000 மெகா வாட் போதுமானதாக இருக்கிறது. எனவே, ஊரடங்கு காலத்தில் மின்சாரத் தேவை குறைந்திருக்கிறது.

டாஸ்மாக் மூடுவதால் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுகிறது. ' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.