தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31 போ் உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கரோனா தொற்று
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31 போ் உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

அக்குழந்தைகள் அனைவருக்கும் அவா்களது பெற்றோரிடமிருந்தே கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அனைத்து குழந்தைகளின் உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டில் பெண் மருத்துவரின் 10 மாதக் குழந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டதும், சிகிச்சைக்குப் பிறகு அக்குழந்தை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com