விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 956 பட்டாசு ஆலைகளும் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.