அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 10:16 am

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் 44 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுமார் 573 ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றும்படி தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்திருந்தது.

இதையடுத்து திருச்சி, பெரம்பூர், மதுரை, சேலம் ரயில் பணிமனைகளில் இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை திருச்சி பணிமனையில் 44 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பொறுத்துவது, திரைச்சீலைகளைப் போடுவது, குப்பைத் தொட்டிகள் வைப்பது என பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த 44 ரயில் பெட்டிகளும், அவசர காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.