உத்தமபாளையத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தியாக திருநாளாம் பக்ரீத் தினத்தன்று பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பொருளாதாரத்தை பின்தங்கியிருக்கும் மக்களுக்கு உணவுப்பொருள்களை வணங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகையான பக்ரீத் சிறப்பாக கொண்டாடினர்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இஸ்லாமியர்களின் இறை மார்க்கமான தொழுகை அவரவர் இல்லங்களிலேயே தனிமனித இடைவெளியே கடைபிடித்து அனுசரிக்கப்பட்டது.

அப்போது இந்தியா உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர வேண்டும். பின்தங்கிப் போன பொருளாதாரமும் முன்னேற்றம் பெற்று அனைத்து சமுதாய மக்களும் சிறப்பாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com