இணைய வழி பாடம் புரியாததால் மாணவர் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் புதன்கிழமை இணைய வழி கல்வியில் பாடங்கள் புரியாததால் மன உளைச்சலில் இருந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் அபிஷேக் 
மாணவர் அபிஷேக் 
Published on
Updated on
1 min read

due to lack of internet lessons

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் புதன்கிழமை இணைய வழி கல்வியில் பாடங்கள் புரியாததால் மன உளைச்சலில் இருந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிபட்டி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அபிஷேக்(15) கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் இணைய தளம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், இணையதளம் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் மன உளைச்சலில் இருந்த அபிஷேக், விஷ மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com