எச்.வசந்தகுமார் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
எச்.வசந்தகுமார் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

எச்.வசந்தகுமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச். வசந்தகுமார் இன்று, வெள்ளிக்கிழமை, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே எச்.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''மக்களவை உறுப்பினரான எச்.வசந்தகுமாரின் மறைவு வருத்தமளிக்கிறது. 
வணிகம் மற்றும் சமூக சேவையில் வசந்தகுமாரின் பங்கு மிகப்பெரியது. தமிழகத்தை முன்னேற்றமடையச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் அவருடனான கலந்துரையாடலில் தெரிந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com