மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அரசுத் துறையில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மூன்று மாத காலத்தில் அறிவித்து முழுமையாக நிரப்பிட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் முத்து, பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் திடீரென மேட்டூர் பேருந்து நிலையம் அருகே சென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நேற்று போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

உடுமலை சீனிவாசா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

குழப்பம் நீங்கும் மேஷ ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

