
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் சங்கத்திற்கு ஆதரவாக ஊத்தங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாரத ஸ்டேட் பாங்க் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச்செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, பாஞ்சாலை ராசன், ஓய்வு பெற்றோர் நல சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட தலைவர் நஞ்சுண்டன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் காளியப்பன், மொளுகு, நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.