விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் மல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் முத்தையா,மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தைலாகுளம் மணி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மான்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.