தமிழ்நாடு
ஈரோட்டில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே சி பழனிச்சாமி, , ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாசலம்,மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.