பல்லடத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
பல்லடத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
Updated on
1 min read


பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதா படத்திற்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் நகர துணை செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர்கள் சூ.தர்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் ப,நடராஜன், ஏ.சித்துராஜ், குங்குமம் சிவக்குமார்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிசாமி, யவனகதிரவன், சித்ராதேவி,ஞானம்பிகை,செல்வி,வனஜா உள்பட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com