சென்னையில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி

சென்னை கோடம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த நரசிம்மன் என்பவர் உயிரிழந்தார். 
கோடம்பாக்க பாதாள சாக்கடை குழி
கோடம்பாக்க பாதாள சாக்கடை குழி


சென்னை கோடம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த நரசிம்மன் என்பவர் உயிரிழந்தார். 

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே நடந்து செல்லும்போது கழிவுநீர் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த முதியவர் நரசிம்மன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

உயிரிழந்த நரசிம்மனுக்கு மனைவி மட்டுமே உள்ளார். குழந்தைகள் இல்லை. 

நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்த தாய், மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் சென்னை வாழ் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 

மாநகராட்சி அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com