சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னமனூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் விழிப்புணர்வு முகாம்

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளின் வேலைப்பளுவை குறைக்கவும், பழம் மற்றும் காய்கறிகளில் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு முகாம்

News image

காமாட்சிபுரம் சென்டெக்ட்  வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்.

Updated On :17 டிசம்பர் 2020, 6:57 am

DIN


உத்தமபாளையம்: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளின் வேலைப்பளுவை குறைக்கவும், பழம் மற்றும் காய்கறிகளில் ஏற்படும் சேதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சேர்மன் பச்சைமால் பழம் மற்றும் காய்கறி பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னாள் வேளாண் இணை இயக்குநர் ராஜாராம் சிறப்புரை ஆற்றினார். 

கேரளம் மாநிலம் அசோக் தாகூர் மற்றும் ஷாஜி வர்கீஸ் ஆகியோர் பழம் மற்றும் காய்கறிகளின் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல் முறை விளக்கம் அளித்தனர்.

இம்முகாமில் ,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும்  சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியாளர் மைதிலி மற்றும் மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.