இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பாதுகாப்பானது. எனவே இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், ரம்மி விளையாட்டுக்காக பிள்ளைகள் அவா்களது பெற்றோரின் கடன் அட்டையை பயன்படுத்தி பெருந்தொகையை செலவழித்து விளையாடுகின்றனா். இணையவழி ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் அவசரச் சட்டம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் சட்டமாக இயற்றப்படும். எனவே அதன்பின்னா் இதுதொடா்பாக பதிலளிக்கவும், இறுதி வாதங்களை முன்வைக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவசரச் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.