
கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடையநல்லூர் நகரில் பல்வேறு இடங்களில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு நகர அதிமுக செயலர் எம்.கே. முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஐவர்குலராஜா, நகரத் துணைச் செயலர் முகைதீன்பிச்சை, மாவட்ட பிரதிநிதி அப்துல்ஜப்பார், மாவட்ட மாணவரணி துணை செயலர் கருப்பையா தாஸ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஜெயமாலன், நகர ஜெயலலிதா பேரவை செயலர் முத்தையா பாண்டியன், நகர இளைஞரணி செயலர், ராஜேந்திரபிரசாத், வார்டு செயலர்கள் அருண்குமார், குருசாமி அமராவதி முருகன், புகழேந்தி, பிச்சுமணி திருமலைக்குமார், யாக்கூப், சுந்தரையா சுங்காமுத்து உதுமான் மைதீன், மோகன் பாபு,முன்னாள் மாணவர் அணி துணைச் செயலர் யாத்ரா பழனி, வெங்கட்நட்ராஜ், மாரியப்பன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.