ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பொங்கல் பரிசுத் தொகை: மாற்றுத் திறனாளிகளுக்கு, 25% கூடுதலாக கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 7:56 pm

DIN


சென்னை: மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நம்புராஜன் தாக்கல் செய்த பொது நல மனுவில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2, 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, பொங்கல் பரிசுத் தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கடந்த ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தொடா்ந்தபோது, கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டம் இல்லை எனக்கூறி கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. ஆனால், திட்டம் இல்லாமல், பொங்கல் பரிசு வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இதைத்தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், பொங்கல் பரிசு குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர, தனி நபா்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவின் கீழ் இது பொருந்தாது என வாதிட்டாா்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.