இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கடந்த ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தொடா்ந்தபோது, கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டம் இல்லை எனக்கூறி கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. ஆனால், திட்டம் இல்லாமல், பொங்கல் பரிசு வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இதைத்தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், பொங்கல் பரிசு குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர, தனி நபா்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவின் கீழ் இது பொருந்தாது என வாதிட்டாா்.