கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மலைவாழ் மக்களின் நலனுக்காக அதிமுக அரசு பாடுபடும்: முதல்வர் பழனிசாமி 

மலைவாழ் மக்களின் நலனுக்காக அதிமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

News image

கலந்துரையாடல் கூட்டத்தின் போது மலைவாழ் மக்கள் வழங்கிய பரிசுகளை வாங்கிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.

Updated On :30 டிசம்பர் 2020, 6:55 am

DIN

நாமக்கல்: மலைவாழ் மக்களின் நலனுக்காக அதிமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 9 மணி அளவில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய், புதன்கிழமைகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் புதன்கிழமை சேந்தமங்கலம் வந்த அவர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். 

அப்போது பழங்குடியின மக்கள் கொல்லிமலைக்கு அவசர ஊர்தி,  பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிகம் உள்ளதால் ரத்த வங்கி, வேளாண் பயிர்களை மயில்கள் நாசம் செய்வதால் அப்பறவைகளுக்கென தனி பூங்காவை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும். இங்கு வாசனை திரவியங்கள் அதிகம் விளைவதால் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தி தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், கொல்லிமலை வனப் பகுதியில் சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் நாங்களே சாலை அமைத்துக் கொடுத்து விடுவோம். கொல்லிமலையில் நீர்மின் திட்டம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே இங்கு அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் தொகுதியை போல் சேந்தமங்கலம் தொகுதியும் மேம்படுத்தப்படும். மலைப்பகுதிகளில் சோலார் மின் வசதி, இணையதள சேவையை வசதிக்கான உயர் கோபுரங்கள் அமைக்க உரிய ஆய்வு செய்யப்படும். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு முழுமையாக பாடுபடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.