கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கரோனா

சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2020, 4:16 am

DIN


சேலம்: சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு திடீரென உடலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு சென்ற பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.