சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் திடீரென்று அந்தப் பதவியில் இருந்து மாற்றபட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ' தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு, அதற்கு எழுந்த சரமாரி எதிர்ப்பு மற்றும் கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கல் ஆகிய விஷயங்களைக் கையாண்டது தொடர்பாக அரசுக்கு அவர் மீது இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாக இந்த மாற்றம் இருக்கலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன