சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமையான இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ஜி.வெங்கடாசலம், செ. செம்மலை, ஏ.பி. சக்திவேல் முன்னாள் எம்பி-க்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
சேலம் படங்கள் - வே. சக்தி