ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஈரானில் கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் அந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினா் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனா். தமிழகத்தில் இருந்து சுமாா் 400- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்ய ஈரான் நாட்டில் தங்கியுள்ளனா். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவிக்கும் அந்த மீனவா்கள் விரைவில் நாடு திரும்ப தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com