கூட்டணி இல்லாமலே எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
கூட்டணி இல்லாமலே எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்


உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. விரைவில் புதிய தலைவரை கட்சி அறிவிக்கும். தமிழகத்தில் பாஜக காலம் தொடங்கி விட்டது. அதற்கு உதாரணமே உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ள பாஜகவின் வெற்றி. இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக மக்கள் பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com