சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

தனக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 
Published on

தனக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த  ’இசட் -பிளஸ்’ பாதுகாப்பையும் இன்று வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் மத்திய அரசு திரும்ப பெற்றது. 

இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கடந்த பல வருடங்களாக எனக்கு பாதுகாப்பு அளித்த வந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும், மதத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து பல்கலைக்கழகங்களையும் மாணவர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎஃப் வீரர்ககளைப் பயன்படுத்துமாறு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com