முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்
முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் சுகுமார், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'செங்கல்பட்டு அரசு மருத்துவர் சுகுமார் கரோனாவால் உயிரிழந்தார் என அறிந்து வேதனையுற்றேன். ஆழ்ந்த இரங்கல்!
முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்! இனியொரு மரணம் நிகழாமல் தடுத்திடுக!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...