ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூலை 2020, 2:33 pm

DIN

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் சுகுமார், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'செங்கல்பட்டு அரசு மருத்துவர் சுகுமார் கரோனாவால் உயிரிழந்தார் என அறிந்து வேதனையுற்றேன். ஆழ்ந்த இரங்கல்!

முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்! இனியொரு மரணம் நிகழாமல் தடுத்திடுக!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.