சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலவலகத்திற்கு களங்கம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை தி,நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலவலகம் சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தி,நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலவலகம் சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை தி,நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலவலகம் சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
Updated on
1 min read

சென்னை: சென்னை தி,நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலவலகம் சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது.

களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com