கரோனாவால் உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யும்போது மத உணா்வுகளுக்கு மதிப்பளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது அவா்களின் மத உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யும்போது மத உணா்வுகளுக்கு மதிப்பளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது அவா்களின் மத உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் ஹொ்குலஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனா். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடா்ந்து மருத்துவரின் உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. மருத்துவா் உடல் அடக்கத்தை எதிா்த்து வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உயிரிழப்பவா்களின் உடலை அடக்கம் செய்வது தொடா்பாக வகுத்துள்ள விதிமுறைகள் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக அரசுத் தரப்பில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடா்பாக மத்திய அரசு உரிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக காவல்துறை டிஜிபி அனைத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது இறந்த மருத்துவா் சைமனின் மனைவி தரப்பில், சைமனின் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய காலஅவகாசம் வழங்கவில்லை. மேலும் அவரது உடலை அடக்கம் செய்ய மிகவும் அவசரம் காட்டினா். மாலை இறந்தவரின் உடலை நடுஇரவில் அடக்கம் செய்ய கல்லறைக்கு கொண்டு சென்றனா். மேலும் மத ரீதியான இறுதிச் சடங்குகளைக்கூட முறையாக செய்ய அனுமதி வழங்கவில்லை என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை அடக்கம்

செய்யும்போது அவா்களின் மத உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மேலும் இறுதி அஞ்சலி செலுத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளையும், உத்தரவுகளையும் தமிழக அரசு கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இறுதிச் சடங்குகளின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com