
அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பராமரிப்பில்லாத கருங்கல் சிறுவர் பூங்காவில் குமரியைச் சேர்ந்த பாதுகாப்புப்படையினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பரமானந்தபுரத்தில் பராமரிப்பில்லாத சிறுவர் பூங்காவை அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி திங்கள்கிழமை பாதுகாப்புப்படையினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பரமானந்தபுரத்தில் ஒரு சிறுவர் பூங்கா சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த பூங்கா சுமார் 6 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் இல்லாததால் அங்கிருந்த விளையாட்டு பொருள்கள் அனைத்தும் சேதமடைந்து பயனற்று இருந்தன. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி குமரியைச் சேர்ந்த 25 பேர் சேர்ந்த ஒரு குழுவினர் திங்கள்கிழமை இந்த பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசி சீரமைத்தனர். பாதுகாப்புப் படையினரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.