நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்துத் துறைகளையும் போல நீதிமன்றங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்கக் கோரி அவிநாசியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read


அவிநாசி: அனைத்துத் துறைகளையும் போல நீதிமன்றங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்கக் கோரி அவிநாசியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பொது முடக்க காலத்தில் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் செய்ய அமைத்துள்ள கமிட்டியை உடனடியாக கலைக்க வேண்டும். அனைத்துத் துறைகளையும் போல, நீதிமன்றங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு(ஜேஏஏசி) சார்பில் அவிநாசி குற்றவியல் நடுநர் நீதிமன்றம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் வி.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ஆர்.பி.கனகராஜ் முன்னிலை வகித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com