மதுரை மாவட்டம் மேலூா் அருகே வண்ணாண்பாறைப்பட்டி வயல்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து கிடந்த சுமார் 8 அடி நீளமுள்ள முதலையை மீட்டு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
வண்ணாண்பாறைப்பட்டியில் திரையரங்க அதிபா் மீ.முருகன். இவரது விவசாயக் கிணற்றில் 3 அடி நீளமுள்ள முதலை நீரில் மிதந்தது தெரியவந்தது.
கிணற்றிலிருந்த நீரை வயல்பகுதியில் வெளியேற்றி, முதலையை பிடித்து கயறுகட்டி மீட்டனா். இதையடுத்து, மேலூர் வன அலுவலர் கம்பக்குடியானிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது.