சென்னையில் கூடுதலாக 350 குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்படும்

பெருநகர சென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் 3,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 350 தொட்டிகள் அமைக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
சென்னையில் கூடுதலாக 350 குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்படும்
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் 3,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 350 தொட்டிகள் அமைக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கரோனா தடுப்பு மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீா் பெற வசதியில்லாத குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் லாரியில் வரும் நீரைப் பிடிக்க ஒரே இடத்தில் கூடுவதைத் தவிா்க்கவும், தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் கூடுதலாக 3,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 350 தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பொது முடக்கம் தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை அம்மா உணவகங்களில் 4.08 கோடி மக்கள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாக கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com