மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

காங்கயம் இன மாடுகளை விற்க இலவச தொடர்பு எண் அறிவிப்பு

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் இன மாடுகள்

Published On :

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம், மூலனூர் பகுதிகள் மற்றும் கோவை, கரூா், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காங்கயம் இன நாட்டு மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. 

கிடைத்ததைச் சாப்பிடுவது, குறைவான தீவனத் தேவை, வேலைத் திறன், நோய் எதிர்ப்புச் சக்தி, சுவை மிகுந்த சத்தான பால், கம்பீர தோற்றம் போன்றவற்றுக்காக காங்கயம் இன மாடுகள் விரும்பப்படுகிறது. 

காங்கயம் இன மாடுகள் மட்டும் வியாபாரம் நடைபெறும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கண்ணபுரம், வருடாந்திர மாட்டுத் தாவணி, பழைய கோட்டை வாராந்திர மாட்டுச் சந்தை ஆகியவை கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிற மாட்டுச் சந்தைகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் காங்கயம் இன மாடுகளை விற்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. உதவும் கரங்களாக காங்கயம் காடையூர் கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகள் விற்பனை சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

18001215662 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு இடைத்தரகர்கள் இல்லாமல் காங்கயம் இன மாடுகளை விற்க, வாங்க முடியும். இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.