தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காங்கயம் இன மாடுகளை விற்க இலவச தொடர்பு எண் அறிவிப்பு

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

காங்கயம் இன மாடுகள்

Updated On :17 ஜூன் 2020, 1:13 pm IST

கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகளை விற்பனை செய்ய இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம், மூலனூர் பகுதிகள் மற்றும் கோவை, கரூா், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காங்கயம் இன நாட்டு மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. 

கிடைத்ததைச் சாப்பிடுவது, குறைவான தீவனத் தேவை, வேலைத் திறன், நோய் எதிர்ப்புச் சக்தி, சுவை மிகுந்த சத்தான பால், கம்பீர தோற்றம் போன்றவற்றுக்காக காங்கயம் இன மாடுகள் விரும்பப்படுகிறது. 

காங்கயம் இன மாடுகள் மட்டும் வியாபாரம் நடைபெறும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கண்ணபுரம், வருடாந்திர மாட்டுத் தாவணி, பழைய கோட்டை வாராந்திர மாட்டுச் சந்தை ஆகியவை கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிற மாட்டுச் சந்தைகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் காங்கயம் இன மாடுகளை விற்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. உதவும் கரங்களாக காங்கயம் காடையூர் கொங்கு கோசாலை சார்பில் பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்த காங்கயம் இன மாடுகள் விற்பனை சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

18001215662 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு இடைத்தரகர்கள் இல்லாமல் காங்கயம் இன மாடுகளை விற்க, வாங்க முடியும். இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.