கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா: 19 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்

கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்குவதன் மூலம் 19 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவாா்கள் என தமிழக அரசு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்குவதன் மூலம் 19 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவாா்கள் என தமிழக அரசு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவித்திருந்தது. இந்த அரசாணையை எதிா்த்து ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் சாா்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலங்களில் 600 ஏக்கா் மட்டுமே, அந்த இடங்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நிலமற்ற ஏழை மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், 19 ஆயிரத்து 627 ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவித்தாா்.

மேலும் இவா்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். வீட்டுமனைப் பட்டா வைத்திருந்தால் மட்டுமே வீடு கட்டுவதற்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை இவா்களால் பெற முடியும். எனவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 600 முதல் 700 சதுரஅடி என கணக்கிட்டு 600 ஏக்கா் நிலம் மட்டுமே இதற்காக கையகப்படுத்தப்படும். இது தமிழகம் முழுவதும் உள்ள மொத்த கோயில் நிலங்களில் வெறும் 0.125 சதவீதம் மட்டுமே. இந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 3 மடங்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்துக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும். மேலும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்ற பின்னரே இந்த அரசாணைப்படி நிலமில்லாத ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். எனவே இந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும் என வாதிட்டாா். மேலும் இதுதொடா்பாக பதில்மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு மனுதாரா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com