தமிழகத்தில் வீடு இல்லாதோருக்கு கோயில் நிலங்களை வழங்குவதற்குப் பதிலாக புறம்போக்கு நிலங்களை வழங்கலாம் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா, தமிழகத்தில் வீடு இல்லாதோருக்கு கோயில் நிலங்களை வழங்குவதற்குப் பதிலாக புறம்போக்கு நிலங்களை வழங்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், 'அதிமுக அரசு இந்து விரோத அரசு என்று சித்தரிக்க சில அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது' என்றும் கூறினார்.